சிம்புவுக்கு வில்லனா அரவிந்தசாமி?

டிராப் ஆகும் நிலைக்கு வந்த  ’மாநாடு’ திரைப்படம் மீண்டும்  படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ’மாநாடு’ திரைப்படம் கடந்த ஆண்டே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வந்து தற்போது  மாநாடு பாடதிதின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மாநாடு படத்தில் வில்லனாக நடிப்பதற்கு  சுதீப்பை படக்குழுவினர் அணுகி அதற்கு அவர்   மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் அரவிந்தசாமியை அணுகி பின் வில்லனாக  ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version