திருவண்ணாமலை அருகே மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே மேல்பாலானந்தால் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் மழை நீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகினறனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாலானந்தல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வறட்சியை தடுக்க, தற்போது பெய்து வரும் மழை நீரை வீணாக்காமல், வீடுதோறும் மழைநீர் சேகரிப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை, முழுமையாக பயன்படுத்தபடுத்தாதன் விளைவாக, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை போக்க, அனைத்து கிராமத்திலும் மழை நீர் சேமிப்பு திட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும் என்று மேல்பாலானந்தல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version