ஈரோட்டில் சுதந்திர தினவிழாவை ஒட்டி கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் சுதந்திர தினவிழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மழைநீர் சேகரிப்பு, நீர் சேமிப்பதன் அவசியம், குடி மராமத்து பணிகள் மூலம் தூர்வாரும் குட்டைகள், மலைப்பகுதியில் பரவி வரும் தொண்டை அடைப்பான் நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது. கிராம சபாவில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version