கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில், நவநீதன் என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். பட்டா மாறுதலுக்கான வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு இடைத்தரகர் பணியும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையெப்பம் இட வலியுறுத்தி, சீமானுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா-வை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

Exit mobile version