விக்கிரவாண்டி தொகுதியில் துணை முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துதமிழ்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சிந்தாமணி பகுதியில் வாக்கு சேகரித்த அவர், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், தொகுதி மக்களின் தேவைகளை அவர் நிறைவேற்றுவார் என்றார். மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சிறப்பான நல்லாட்சியை வழங்கியதாக குறிப்பிட்டார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்ட அவர், 28 ஆண்டுகள் அதிமுக நல்லாட்சி வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version