விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி உள்ளது. தொகுதி முழுவதும் இடைத்தேர்தலுக்காக, 139 இடங்களில் 275 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் காவலர்களும், 3 கம்பெனி துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கை முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. வாக்குப்பதிவையொட்டி இன்று தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Exit mobile version