விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்துச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மாதா கோயில் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், அதிமுகவிற்கு வாக்களிக்கும் படி வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version