நாளை மறுநாள் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறுகிறது.

அதன்படி, காலை 9 மணி முதல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. அதேபோல, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

பிற்பகல் 3 மணி முதல் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, கேரளா மாநில தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.

 

Exit mobile version