விக்கரமாதித்யா கப்பலில் ராஜ்நாத்சிங் யோகா பயிற்சி

எந்தவித பாதுகாப்பு சவாலையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் பயணம் மேற்கொண்டார். விமானம் தாங்கி கப்பலின் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், கப்பலின் பல்வேறு செயல்பாடுகளை கேட்டறிந்தார். இந்திய கடற்படை வீரர்களின் பயிற்சிகளை பார்வையிட்ட பின்னர், அதிகாலை கப்பலின் அதிகாரிகளுடன் சேர்ந்து யோகாப் பயிற்சி மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தவித பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் அமைதியைக் குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்திய கடற்படை தீவிரமாக செயல்பட்டு பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version