தலைமறைவு குற்றவாளி-விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி

தலைமறைவு குற்றவாளி என்ற அமலாக்கத்துறையின் அறிவிப்புக்கு தடைக் கோரிய விஜய் மல்லையாவின் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு எதிராக விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவு குற்றவாளி என்ற அமலாக்கத்துறையின் அறிவிப்புக்கு தடைக் கோரிய விஜய் மல்லையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மும்பை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Exit mobile version