கும்பகோணத்தில் விஜயேந்திர சுவாமிகளின் 405-வது ஆராதனை விழா

மகான் ராகவேந்திரரின் குருவான விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் 405வது ஆராதனை விழா கும்பகோணத்தில் உள்ள மூல பிருந்தாவனத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள மகான் ராகவேந்திர சுவாமியின் பரம குருவான விஜயேந்திர சுவாமிகளின் 405 ஆவது ஆராதனை விழா நடைபெற்றது. கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இந்த விழா வரும் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான மத்யா ஆராதனை நடைபெற்றது. இதில் மந்த்ராலய மடத்தின் மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகான் ராகவேந்திரர் தொடர்பான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மந்த்ராலயத்திற்கு புதிய ரயில்கள் இயக்குவதற்கு மத்திய ரயில்வே அமைச்சரிடம் முறையிடுவோம் என்றும் கூறினார்.

Exit mobile version