விஜய் மல்லையா நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படும் உத்தரவை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.

Exit mobile version