வன்முறையை தூண்டும் சர்கார் படத்தின் காட்சிகள் -அமைச்சர் சி.வி. சண்முகம் கண்டனம்

சர்கார் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், சர்கார் படத்தில் இலவச பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட காட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி செய்யும் நக்சல் தீவிரவாதிகள் போல், விஜய் செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Exit mobile version