வியட்நாமில் காற்றில் பரவக்கூடிய புதிய வகை வைரஸ்

வியட்நாமில் காற்றில் பரவக்கூடிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வியட்நாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குணமடையாமல் இருப்பதால், அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அதிக வீரியம் கொண்ட புதிய வகை வைரசால் பாதிக்கப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வைரஸ், இந்தியா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வியட்நாம் அரசு, உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளது. 

Exit mobile version