’உடல் உறுப்பு தானம் குறித்து ஊடகங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும்’ – துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு!

jagdeep dhankar

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு ஊடகங்களும், மதத்தலைவர்களும் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில், உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சார நிகழ்ச்சியை துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என கூறினார்.

உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சனை என்றும், உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version