உடல் உறுப்பு தானம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தானம் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்த 5 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர். உடல் உறுப்பு தானத்திற்காக தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக விருது வாங்கி இருப்பதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மட்டுமே இது சாத்தியமானது என்று கூறினார்.

பின்னர் செய்தியாளகளிடம் பேசிய அவர், உடல் உறுப்பு தானம் வெளிப்படைத் தன்மையுடன் விதிமுறைப்படி செயல்படுவதாகவும், அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை தரப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

Exit mobile version