மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 9 பேரின் உயிர் காப்பாற்றப்படும் என மருத்துவர்கள் நெகிழ்ச்சி!

organ donation

விழுப்புரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள், உறவினர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கடந்த செப். 1-ம் தேதி வேலூரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து அவரது இதயம், சிறுநீரகம் உட்பட 5 உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து, உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

பெறப்பட்ட உடல் உறுப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதன் மூலம் 9 பேர் பயன்பெறுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version