நீதிமன்றத்தின் தீர்ப்பால் 2-வது நாளாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக தொண்டர்கள்! களைகட்டும் விழுப்புரம்!

admk verdict celebration

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கும் விதமாக விழுப்புரத்தில் 2-வது நாளாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அதிமுக சார்பில், ஜானகிபுரம் அருகே 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version