கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்!

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக அதிகார பூர்வ வேட்பாளரை, கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். அதன்படி, அனைத்து கழக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து அதனை நாளை 5ம் தேதி இரவு 7 மணிக்குள் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக்கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் தன்னிடம் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version