ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வரும் 21 ஆம் தேதி, ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள  சிவராத்திரி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார். இதற்காக அன்றைய தினம் பகல் 12 மணிக்கு அவர் கோவை வருகிறார். இதனை தொடர்ந்து அன்றிரவு நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி மத்திய ரிசர்வ் காவல்துறையினர், மத்திய அதிவிரைவுப்படை காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Exit mobile version