ஈரோடு சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு வேணுகோபால் சுவாமி கோவிலுக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைகளாகப் பழவகைகள் மற்றும் இனிப்பு வகைகளைக் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மங்கள வாத்ய இசை முழக்கத்துடனும் வேணுகோபால் சுவாமி ருக்மணி திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றுதலும், பூக்குண்டுகள் உருட்டுதலும் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version