கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் ஆடினார்

கோயில் கும்பாபிஷேக விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உற்சாகமாக ஒயிலாட்ட நடனம் ஆடினார்.
கோவை அருகே உள்ள கைகோலபாளையத்தில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியும் கலந்துகொண்டு உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடினர். அதனை அங்குள்ளவர்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.

Exit mobile version