நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நியூஸ் ஜெ குழுவினர் – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பாராட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி குழுவினருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நியூஸ் ஜெ. தொலைக்காட்சி குழுவினர் மீட்பு நிவாரண பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வழியாக சென்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், நியூஸ் ஜெ குழுவினர் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை பார்வையிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதித்த மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

 

 

Exit mobile version