மதுரையில் மூத்த வழக்கறிஞர்களின் வாகனங்கள், வீட்டு கண்ணாடி உடைப்பு

மதுரையில் மூத்த வழக்கறிஞர்களின் வீடுகளில், கார், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரான அஜ்மல்கான், ஜானி பாஷா, வெங்கடேஸ்வரன், சந்திரசேகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் வாகனங்கள், வீட்டு ஜன்னல்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வரும் பத்மநாபன் என்பவர்தான் வாகனங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து, தலைமறைவாக இருந்த பத்மநாதனை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மூத்த வழக்கறிஞர்களின் வாகனங்கள் மற்றும் வீட்டை சேதப்படுத்தியது ஏன் என கைதான பத்மநாபனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version