சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்க வேண்டும்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

சபரிமலையில் வருகிற 16ம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் தொடங்குகிறது. இதையொட்டி திருவனந்தபுரத்தில் தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆணையர் பனீந்திர ரெட்டி, இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழகத்தில் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Exit mobile version