தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை: மது பாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல்

தமிழக கேரள எல்லையில் துணை ராணுவத்தினர் மேற்கொண்ட வாகன சோதனையில் மது பாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸமாக் கடைகளையும் அடைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தமிழக -கேரள எல்லையான புளியரை பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த அரசு பேருந்துகள், வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் மதுபாட்டில்கள், ரேஷன் அரிசி உள்ளிட்டவை பிடிபட்டுள்ளன. இந்த சோதனை தொடரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version