திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னை ஆவடியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்ககோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என அதன் தலைவர் விளக்கம் அளித்தார். இதையடுத்து அதற்கான உரிய ஆவணத்தை அளிக்க கோரி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Exit mobile version