குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு சம்மன் அனுப்ப திட்டம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 39 பேருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 35 அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இரண்டு இணை ஆணையர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இரண்டு பேர் உட்பட மொத்தம் 39 பேருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த சிலரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version