டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த தேர்வுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. வருகிற 16-ந்தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11.59 மணியுடன் முடிவடையும் நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 

Exit mobile version