குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

ஒரு மையத்தில் நடந்த முறைகேட்டை வைத்துக் கொண்டு, குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குரூப்-4 முறைகேடு தொடர்பாக சென்னை தலைமைச்  செயலகத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version