ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்திற்கு வர வேண்டிய 4 ஆயிரத்து 375 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42ஆவது கூட்டம் இன்று கூடுகிறது. கூட்டம் குறித்து, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையை பெற்றுள்ளதாகவும், நிலுவை தொகையை வழங்க அரசு சார்பில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக கூறினார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உலக நடப்பு, தமிழக அரசியல் நடைமுறை குறித்து தெரியாமல் கருத்து தெரிவித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Exit mobile version