குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 181 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வுகள் கடந்த ஜூலை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடைபெற்றது. மூன்று நாட்கள் வரை நடைபெற்ற இந்த முதன்மை தேர்வில் 9 ஆயிரத்து 441 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், குருப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

குரூப்-1 முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version