வேலம்மாள் கல்வி குழும நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை

வேலம்மாள் கல்விக்குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையின் சோதனை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை வேலம்மாள் குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், நேற்று காலை முதல் தொடங்கிய வருமானவரித்துறையின் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

Exit mobile version