ஈரோடு வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.7,43,000 பணம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 7 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நடைபெறவிருக்கும் மக்களவைத்தேர்தலை ஒட்டி தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நீலகிரி மக்களவை தொகுதிகுட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது நடத்தப்பட்ட வாகன சோதனையில் விவசாயி சம்பத் என்பவரிடம் 1 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் அப்துல் மஜித் என்பவரிடம் 2 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் முகமது என்ற காய்கறி வியாபாரியிடம் 96 ஆயிரமும், ஓட்டுநர் மகேந்திரன் என்பவரிடம் 95 ஆயிரம் பணமும் ராஜேஷ்குமார் என்பவரிடம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 170 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version