யானை தந்தம் கடத்தல் வழக்கில் குட்டி வீரப்பன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள காப்புக் காட்டில் புகுந்து, வேட்டையில் ஈடுபட்டதாக இரு மாதங்களுக்கு முன்னால், ஈரோடு வனத்துறையினர், சரவணன் என்கிற குட்டிவீரப்பனை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர், கடந்த ஜூலை, 27 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் சுற்றித்திரிவதாக, மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், யானை தந்தம் கடத்தல் வழக்கில், குட்டிவீரப்பனை கைது செய்து, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Exit mobile version