முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி – விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழுகொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. சென்னை மக்கள் குடிநீருக்காக தினமும் சராசரியாக சுமார் நாற்பது கன அடி தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஏரிக்கு மேலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்கள் தூர்வாரப்பட்டதால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version