முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, வாய்க்கால் தூர்வாரும் பணியில் நடைபெற்ற முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார் அளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தலைஞாயிறு அருகே உள்ள மாராசேரியில் அவசர கதியில் நடைபெற்று வரும் வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து அப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு முறையாக பதிலளிக்காத அதிகாரிகள், பணிக்கு இடையூறு செய்ததாக கூறி 6 விவசாயிகள் மீது போலீசில் மீது புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளின் முறையற்ற செயலுக்கு விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வாய்க்கால் பணியை விவசாயிகள் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர்.

Exit mobile version