தொடர் மழையால் கடல் போல் காட்சி அளிக்கும் வீடூர் அணை

தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

திண்டிவனம் அருகேயுள்ள வீடூர் அணையின் மூலம் 3 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 28 புள்ளி 500 அடி இருந்த அணையின் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 30 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரித்தால் வீடூர் அணை நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதையடுத்து, அணையிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Exit mobile version