விமரிசையாக நடைபெற்ற படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

பண்ருட்டியில் படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிரசித்தி பெற்ற படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடியை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரொட்டம் நடைபெற்றது. இதில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மாட வீதி வழியாக புறப்பட்டுசென்று மீண்டும் தேரடியை அடைந்தது.

Exit mobile version