வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை

தமிழக அரசால் சுற்றுலா தலமென்று அறிவிக்கபட்ட வேடச்சந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அடுத்த மாரம்பாடியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த புனித அந்தோனியர் ஆலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தில், உலக அமைதி வேண்டி அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தபட்டன. பின்னர் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

Exit mobile version