பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விசிக மகளிர் அணியினர் மனு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும் என்றும், அப்போது அவர்கள் வலியுறுத்தினர். ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் அவர்கள் கூறுயுள்ளனர்.

Exit mobile version