பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் துவக்கம்

கோவை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் நடைபெற்ற இலவச வீட்டு மனை வழங்கும் விழாவில், 271 பேருக்கு, மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவை வழங்கினார்.

கோவை மாநகராட்சியின் திறன்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டங்களுக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொன்விழா நகர் பகுதியில் 2 கோடியே 41 லட்சம் மதிப்பில், சாலை மற்றும் ரேஷ்மா கார்டன் பகுதிகளில் பிரதான சாலைகள் உறுப்பு சாலைகள் என தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையிலும் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

Exit mobile version