வாரிசு அமைச்சருக்காக விடிய விடிய போடப்பட்ட சாலை!

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் விளக்கடி பெருமாள் கோவில் தெரு சாலை, கடந்த ஓராண்டாக குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். இதனை, கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், வாரிசு அமைச்சர் வரும் செய்தி அறிந்து மும்முரமாக வேலையில் இறங்கியது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தார் சாலையை முறையாக செப்பனிடாமல் ஆங்காங்கே ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பெயர்த்து, அதில் பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர். ஒரு பகுதி தார் சாலையாகவும், மற்றொரு பகுதி பேவர் பிளாக் சாலையாகவும் அமைத்து வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்த விடியா அரசின் அதிகாரிகள், விபத்து ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version