பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோதாவரி-காவிரி இணைப்புதிட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 17 ஆயிரத்து 600 கோடி செலவில் காவிரி ஆற்றினை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மோட்டார் வாகன மசோதா 2017 ஐ சட்டமாக்குவதற்கு முன்னர் மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது எனவும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தகுந்த தொழில்நுட்ப உதவிகளை வழங்க பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், தமிழக கடற்கரையோரங்களில் புதைவழி மின் பாதை அமைக்க 7 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

Exit mobile version