நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 17ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

மக்களவை இன்று கூடியதும், அதிமுக எம்பிக்கள் மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.பிக்கள் ரஃபேல் விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 12 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version