வள்ளியூர் அருகே மாணவர்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகள்

வள்ளியூர் அருகே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள் இடம்பெற்றன. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரில், தனியார் கல்லூரி சார்பாக யோகா, கராத்தே, சிலம்பம், வில்அம்பு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றன. போட்டிகளை, அதிமுக மாவட்ட கழக மகளிரணி செயலாளர் ஸ்வர்ணா விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன. 

Exit mobile version