காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – வன்னியர் அமைப்புகள் கோரிக்கை

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு, மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில், காடுவெட்டி குருவின் மகளும், மருமகனும் பாதுகாப்பு கேட்டு அளித்துள்ள மனு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். குருவின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அவரது குடும்பத்திற்கு உதவுவது எங்கள் கடமை என்று கூறினர்

மத்திய-மாநில அரசுகள் குருவின் குடும்பத்திற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Exit mobile version