வைரமுத்து மீதான பழிகள் சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் -கபிலன் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து மீதான பழிகள் சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று அவரது மகன் கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் தன்னை கேட்கலாம் என்றும், எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை என்றும் கபிலன் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்வதாகவும், சிலர், அப்படி இல்லை என வாதாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து, நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என கபிலன் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார். பழிகள் சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version