ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் இன்று மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், கடந்த 14ஆம் தேதி துவங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா, ஜனவரி 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல்பத்து உற்சவத்தின் 10ஆம் நிறைவு நாளாகிய இன்று, மோட்சம் அடைய பெண்ணாசையை துறக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, நம்பெருமாள் காட்சியளித்தார்.

Exit mobile version