ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழா

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து நிகழ்ச்சியின் 6-ஆவது நாள் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து, இரா பத்து என 20 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி தொடங்கிய பகல் பத்து நிகழ்ச்சியின் 6-ஆவது நாளில், பெருமாள் புஜகீர்த்தி சவுரி கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில், கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, வரும் 6-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version